திருமலை பூவராக சுவாமி கோயிலில் வராக ஜெயந்தி கோலாகலம்
ADDED :1 days ago
திருப்பதி; ஆதி-வரஹ க்ஷேத்திரமாக போற்றப்படும் திருமலையில் உள்ள பூவராக சுவாமி கோயிலில் இன்று காலை சாஸ்திர வராக ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, காலை வேளையில் கலச ஸ்தாபனம், கலச பூஜை மற்றும் புண்யாஹவாசனம் (சுத்திகரிப்புச் சடங்கு) போன்ற வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, மூலவருக்குப் பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனக் கலவை ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி சி. வெங்கய்ய சௌத்ரி, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.