உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை வீர அழகர் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு

மானாமதுரை வீர அழகர் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு

மானாமதுரை: மானாமதுரையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு வீர அழகர் கோயிலில் அதிகாலையிலேயே சுவாமிக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு கோயில் முன் மண்டபத்தில் வீர அழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சர்வ அலங்காரங்களுடன் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக,ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது பின்னர் வீர ஆஞ்சநேயருக்கும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோன்று மானாமதுரையில் உள்ள தியாக வினோத பெருமாள், அப்பன் பெருமாள், வேலூர் வேளாங்குளத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள், வேம்பத்தூரில் உள்ள பூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில் மற்றும் இளையான்குடியில் வேணுகோபாலப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்,தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !