அண்ணாமலையார் கோவில் நன்னீராட்டுப் பெருவிழா!
ADDED :4293 days ago
ஆற்காடு: அண்ணாமலையார் கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கோவிலில் உள்ள விநாயகர், முருகர், ஐயப்பன், ரங்கநாதர், 12 ஜோதிலிங்கம், பஞ்ச பூதலிங்கம் மற்றும் உண்ணாமுலை அம்மன் உடனாய அண்ணாமலையாருக்கு யாக பூஜை நடத்தி புனிதநீர் தெளித்து நன்னீராட்டு பெருவிழா செய்யப்பட்டது.