உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலியமேடு ஆஞ்சநேயர் கோவிலில் வைணவ மாநாடு!

சேலியமேடு ஆஞ்சநேயர் கோவிலில் வைணவ மாநாடு!

பாகூர்: சேலியமேடு ஆஞ்சநேயர் கோவிலில், 20ம் ஆண்டு வைணவ மாநாடு நேற்று நடந்தது. மதுரகவி ஆழ்வார் சபை சார்பில் நடந்த, மாநாட்டை   கவுரவ தலைவர் ஜானகிராமன் கொடியேற்றி துவக்கி வைத்தார். தலைவர் வாசுதேவ  ராமானுஜம்  வரவேற்றார். திருக்கோவிலுார் ஜீயர் மடம்,   மடாதிபதி ஸ்ரீநிவாச   ராமானுஜாச்சாரியார்  தலைமை தாங்கினார். திண்டிவனம் நம்மாழ்வார் சபை தலைவர்  வெங்கடேச ராமானுஜதா சர், கண்ணன்   கிருஷ்ணா ஆகியோர்  முன்னிலை வகித்தனர். ஒய்வு பெற்ற  விரிவுரையாளர் அரியரன் துவக்கவுரையாற்றினார்.    செயலாளர் ஜெயராமச்சந்திரன்   ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பேராசிரியை சாந்த லட்சுமி, சென்னை தேவராஜன், திருச்சித்ரக்கூடம்  ரங்காச்சாரியார், கோகுலாச்சாரியார், மதுராந்த   கம் ரகுவீரபட்டாச்சாரி யார், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ராமசாமி ஆகியோர் ஆன்மிக உரையாற்றினார். இறையானுார் ஆதிகேசவ பெருமாள்   பஜனை குழு தலைவர் ஆராவமுதன் ராமானுஜதாசர் தலைமையில், பக்தி பஜனை நடந்தது. பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !