முத்தாலம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!
கடலூர்: பெரியாண்டிக்குழி கிராமம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. பெரியப்பட்டு அடுத்த பெரியாண்டிக்குழி கிராமத்தில் எழுந்தருளியுள்ள முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (9ம் தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் 7ம் ÷ ததி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப் பணம், ரக்ஷாபந்தனம், முதல்கால யாக பூஜை நடந்தது. இன்று 8ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மூல மந்திர ஹோமம், தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, யாத்ராதானம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பூர்ணாகுதி நடக்கிறது. தொடர்ந்து நாளை (9ம் தேதி) காலை 7:00 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் விசேஷ சந்தி, நான்காம் கால யாக பூஜை, கோ பூஜை, பிம்ப சுத்தி, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, மூலமந்திர ஹோமம், கடம் புறப்பாடு, மூலவர் விமான கும்பாபிஷேகம், மூலஸ்தான மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா, சீதாராமர் பட்டாபிஷேக நாடகமும் நடக்கிறது. விழாக் காலங்களில் சொற்பொழிவு நடக்கிறது.