உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலகிராமத்தில் ஆருத்ரா தரிசனம்

ஆலகிராமத்தில் ஆருத்ரா தரிசனம்

மயிலம்: ஆலகிராமம் எமதண்டீஸ்வர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. மயிலம் அடுத்த ஆலகிராமத்திலுள்ள திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் பரிகார கோவிலில் காலை 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள எமதண்டீஸ்வரர், திரிபுர சுந்தரிக்கு மகா தீபாராதனை நடந்தது. கோவிலிலுள்ள சித்தர் ஜீவ சமாதிக்கு மகா அபிஷேகம் வழிபாடு நடந்தது. மயிலம், திண்டிவனம், புதுச்சேரி பகுதிகளிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி குருக்கள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !