பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்!
ADDED :4056 days ago
விழுப்புரம்: சிறுவந்தாடு கனகவள்ளி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கோவிலில் உள்ள மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பெருமாள், கனகவள்ளி தாயாரோடு புஷ்பம், துளசியால் ஜோடித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை பார்த்தசாரதி பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.