முருகய்யனார் கோயிலில் சிவராத்திரி!
ADDED :3930 days ago
நரிக்குடி: நரிக்குடி அருகே வீரக்குடி முருகய்யனார் திருக்கோயிலில் சிவராத்திரி விழா ஐந்து நாட்கள் நடந்தது.இக்கோயில் விழா பிப்., 17 ல் கரக காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவன்று மாலை கணபதி ஹோமம், இரவு ருத்ரா அபிஷேகம், சங்கா அபிஷேகம் நடந்தது. மறுநாள் அதிகாலை வள்ளி ,தெய்வானையுடன் முருகன் சர்வ அலங்காரத்துடன் புறப்பாடு நடந்தது. பின்னர் பொங்கல், அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு உற்சவர் உலா நடந்தது. நேற்று சிறப்பு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தர்கள் கரகமாடி சுவாமிப் பெட்டி எடுத்து வந்தனர். ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் செல்வராணி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.