உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா!

ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா!

மங்கலம்பேட்டை: காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மங்கலம்  பேட்டை அடுத்த காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்ததால் தேர்த் திருவிழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்தாண்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பொது மக்கள் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. இந்தாண்டு வைகாசி தேர்த் திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவு 8:00 மணியளவில் அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 27ம் தேதி காலை 7:00 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சி, 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று (31ம் தேதி) காலை 7:00 மணியளவில் நடந்த தேர்த் திருவிழாவில், ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !