உலக நாயகனே..!
ADDED :3937 days ago
மகரிஷிகளில் சிறப்பான இடம் பிடித்த விஸ்வாமித்திரரை ராஜரிஷி என்பர். இவர் கவுசிகன் என்ற பெயரில் மன்னராக இருந்தவர். உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நண்பர் என்ற பொருளில், பிற்காலத்தில் இவருக்கு விஸ்வாமித்திரர் என்ற சிறப்புப்பெயர் உண்டானது. விஸ்வம் என்றால் உலகம், மித்ரர் என்றால் நண்பர். திருமண பத்திரிகையில், பந்து மித்ர சமேத என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. பந்து என்பது உறவினர்களையும், மித்ரர் என்பது நண்பர்களையும் குறிக்கும். காசியில் அருளும் சிவன், இந்த உலகத்தை இயக்கும் நாயகனாக அருள்பாலிக்கிறார். இதனால் தான் இவருக்கு விஸ்வநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.