உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்!

செஞ்சி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்!

செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மனுக்கு பழங்களை கொண்ட சிறப்பு அலங்காரம் செய்தனர். செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன், கிருஷ்ணகிரி கோட்டை பூவாத்தம்மன், ராஜகிரி கோட்டை செல்லியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 1ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு 48 நாள் மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது.

இதன் 41வது நாள் விழாவை முன்னிட்டு 11ம் தேதி சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சாத்துகொடி, ஆப்பிள், கொய்யா, மாதுளை உள்ளிட்ட பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்தனர்.தொடர்ந்து மகா தீபாராதனையும், பிரசாத விநியோகமும் செய்தனர். இதில் உபயதாரர் மற்றும் விழா குழுவினர், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !