உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் பிரதோஷ வழிபாடு!

உடுமலை கோவில்களில் பிரதோஷ வழிபாடு!

உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.உடுமலையில், தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், ரத்தின லிங்கேஸ்வரருக்கு மாலை, 4:30 மணிக்கு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிேஷகம் நடந்தது.பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில், சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.

பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில், எலையமுத்துார் பிரிவில் உள்ள புவன கணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில்களில், நேற்று மாலை சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது.குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கேஸ்வரர் சன்னதியில், சுவாமிக்கு நேற்று மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து, அலங்காரம் பூஜை நடந்தது.மடத்துக்குளம், கடத்துாரில் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள அர்ச்சுனேசுவரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களில், பிரதோஷம் முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !