முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3719 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோயில் உயரம் அதிகரித்தல் உட்பட மராமத்துப்பணிகளும், கோபுரம் புதுப்பிக்கப்பட்டும் கும்பாபிஷேகம் நடந்தது. செப்., 8 ல் இதற்கான யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. வாஸ்துசாந்தி, மூன்றுகால யாகசாலை வழிபாடுகள் நடந்தது. நேற்று இறுதிகால யாகபூஜை , கஜபூஜை முடிந்ததும் சிவாச்சார்யார்கள் பூஜிக்கப்பட்ட கும்பநீரை சுமந்தபடி கோயிலை வலம் வந்தனர். பெண்கள் பால்குடம் எடுத்து சென்றனர். கும்பநீரால் கோபுரகலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கருவறை அம்மன் பீடத்திற்கும் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.