சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
ADDED :5196 days ago
பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் (30ம் தேதி) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறப்பு. 6.30க்கு மூலவர் சரநாராயண பெருமாள், தாயார், சயனநரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடக்கிறது. 7 மணிக்கு மூலவர் பெருமாள் பூவாலங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 9 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், உள்புறப்பாடும் நடந்து திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒரு மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 6 மணிக்கு சாயரட்சை, நட்சத்திர பூஜை யும், 9 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடக்கிறது.