உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்டிற்கு பாத்தியப்பட்ட, முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று இரவு 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தினமும் ஒரு வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். தொடர்ந்து 15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில், எட்டாம் நாள் விழாவாக பொங்கல் பண்டிகை நடைபெறும். பெண்கள் விரதமிருந்து, கோயில் முன்பாக பொங்கல் வைத்து வழிபடுவர். பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவர். 9 ம் நாள் விழாவாக பூக்குழி அதிகாலையில் நடைபெறும். ஆண்கள், பெண்கள் விரதம் இருந்து பூக்குழியில் இறங்குவர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர். தினமும் கோயில் கலை அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !