அண்ணன்பெருமாள் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்!
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெள்ளக்குளம் என்றழைக்கப்படும் அண்ணன்பெருமாள் கோயில் கிராமத்தில் அருள்மிகு அலர்மேல் மங்கை நாயிகா ஸமேத ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ ப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 108 வைணவத் திவ்யதேசங்களுல் ஒன்றும், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான இந்த தலத்தில் தான் ஞான ஸ்வரூபி யான குமுதவல்லி நாச்சியார் அவதரித்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு வரும் 8ம் தேதி மஹாஸம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. சர்வசாதகம் பார்த்தன்பள்ளி சேஷாத்திரி பட்டாச்சாரியார் தலைமையில் 50க்கும் மேற்பட்டேர் யாக சாலை பூஜைகளை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 8ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் முடிந்து 6:30 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் மஹா ஸம்ப்ரோக்ஷ்ணம் நடை பெற உள்ளது. மஹா ஸம்ப்ரோக்ஷ்ணத்தில் கலந்துகொண்டு பெருமாளை சேவித்தால் சகல பாக்யமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. யாகசாலை பூஜைகளுக்கான ஏற்பாடுகளை மா தவ பட்டாச்சாரியாரும், மஹாஸம்ப்ரோக்ஷ்ணத்திற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கோபி, கோயில் பணியாளர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்துவருகின்றனர்.