உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலசை முத்துமாரியம்ம கோவிலில் தீமிதி உற்சவம்

வலசை முத்துமாரியம்ம கோவிலில் தீமிதி உற்சவம்

மங்கலம்பேட்டை: வலசை முத்துமாரியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மங்கலம்பேட்டை   அடுத்த வலசை முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை 7:00   மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.  தீமிதி திருவிழாவையொட்டி காலை 7:00   மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 10:00 மணிக்கு அரவான் களபலி நிகழ்ச்சி நடந்தது. மாலை 4:00 மணியளவில் நடந்த தீமிதி விழாவில்   ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !