உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.68 லட்சம்

திருத்தணி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.68 லட்சம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள், 24 நாட்களில், 68.02 லட்சம் ரூபாயை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிக்கின்றனர். பின், பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, அங்குள்ள உண்டியல்களில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில், 24 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, நேற்று முன்தினம், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) தனபாலன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 68 லட்சம் ரூபாய், 648 கிராம் தங்கம், 13 ஆயிரம் கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !