அம்மாபாளையத்தில் மாரியம்மன் தேர் திருவிழா
ADDED :3352 days ago
அரூர்: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அம்மாபாளையத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. பின், மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து, முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்து, கோவில் அருகில் நிலை நிறுத்தினர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.