உலக மக்களின் நலன் வேண்டி திருவிளக்கு பூஜை
ADDED :3532 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் ஸ்ரீ சத்தியசாய் சேவா சமிதி சார்பில், உலக மக்களின் நலன் வேண்டி திருவிளக்குப் பூஜை விருத்தாச்சலத்தில் நடந்தது. மகளிர் தலைவி அனுராதா ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் 108 பெண்கள் விளக்கு பூஜை செய்தனர். சமிதி ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கருவேப்பிலங்குறிச்சியில், பேரணையூர் சமிதி சார்பில் 27 பெண்கள் விளக்குப் பூஜை நடத்தினர்.