உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்தூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

ஆத்தூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், நேற்று, பிரதோஷ பூஜையொட்டி, மூலவர் காயநிர்மலேஸ்வரர் மற்றும் நந்திக்கு, பால், தயிர், மஞ்சள், நெய், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பூஜை நடந்தது. மாலை, 5 மணியளவில், காயநிர்மலேஸ்வரர், நந்தி பகவான், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதில், ஆத்தூர், நரசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், பிரதோஷ பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !