உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாள் வீதி உலா

கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாள் வீதி உலா

ஊத்துக்கோட்டை: ஆதிகேசவ பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியபாளையம் அடுத்த, ஆரணி ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம், 10 நாள் பிரம்மோற்சவ விழா கடந்த, 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் காலை, 6:30 மணிக்கு, கொடியேற்றம், கொடி பொங்கல், 9:00 மணிக்கு பவழக்கால் சப்பரத்தில் உற்சவர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 4ம் தேதி காலை, 6:30 மணிக்கு, உற்சவர் நாக வாகனத்திலும், மாலை, 6:30 மணிக்கு, சிம்ம வாகனத்திலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும், மாலை, 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். நேற்று காலை, 7:00 மணிக்கு, உற்சவர் கருட வாகனத் திலும், மாலை, 6:30 மணிக்கு, அம்ச வாகனத் திலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !