கூடல் சுந்தரவேலவர் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :3476 days ago
கூடலுார்: நவராத்திரி விழாவை முன்னிட்டு, கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மகாலட்சுமி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுருளிமலை, பழநி மலை பாதயாத்திரை மகளிர் குழுவினர் பஜனை பாடல்கள் பாடினர். கோயில் மண்டபத்தில் கொலு அமைக்கப்பட்டிருந்தனர். மாலையில் பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.