மடுகரை சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3495 days ago
நெட்டப்பாக்கம்: மடுகரை சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்துள்ள மடுகரை கிராமத் தில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், இரவு 7.30 மணிக்கு தைப்பூச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.