வீரராகவ பெருமாள் கோவில்களில் ஏகாதசி திருமஞ்சனம்
திருவள்ளூர் : பெருமாள் கோவில்களில், நேற்று, ஏகாதசி திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலையில், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக உற்சவர் மாடவீதி புறப்பாடு நடந்தது. திருவள்ளூர் ,சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், உற்சவருக்கு ஏகாதசி திருமஞ்சனம் அலங்காரம் நடந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த, பெருமுடிவாக்கம் கோதண்ட ராமர் கோவிலில், காலையில் திருமஞ்சனம் நடந்தது. பூங்கா நகர் சிவ - விஷ்ணு கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு, ஜலநாராயணருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. கொண்டமாபுரம் தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், ராமருக்கு ஏகாதசி பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில், பிரபந்த பாராயணத்துடன் பெருமாள் உள் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.