உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடைக்கானலில் அந்தோணியார் திருவிழா

கொடைக்கானலில் அந்தோணியார் திருவிழா

கொடைக்கானல் : கொடைக்கானலில் டவுன் பதுவை அந்தோணியார் திருவிழா நடந்தது. இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் ஜெப மாலையும், அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடந்தது. சென்பகனுார் பாதிரியார் சார்லி மறையுரையாற்றினார். இரவு 8:30 மணிக்கு அலங்கார மின் தேர்பவனியும், நேற்று மதியம் 1:00 மணிக்கு சப்பரபவனியும் நடந்தது. மாலை 6:00 மணிக்குமதுரை இரயிலார் நகர் பாதிரியார் ஜேம்ஸ் பால்ராஜ் நன்றி திருப்பலி நிகழ்த்தினார். கொடியிறக்கம் நடந்தது. இருதயாண்டவர் கோயில் பாதிரியார் ஜெரோம் எரோணிமுஸ், பாதிரியார்கள் பால்ராஜ், விக்டர் லுாயுஸ் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயிலின் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !