உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் மாரியம்மன் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

விருதுநகர் மாரியம்மன் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். இக்கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 2ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பராசக்தி மாரியம்மன்,வெயிலுகந்தம்மன் பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி பல்வேறு வாகனங்களில் விதி உலா வந்து அருள்பாலித்தனர்.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.9 ல் நடந்தது. அடுத்த நாள் அம்மனுக்கு பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.  வெயிலுகந்தம்மன், மற்றும் மாரியம்மன் தேரில் எழுந்தருள நேற்று தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரோட்ட நடைபெற்ற நேரத்தில் வானத்தில் மேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !