உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளியை முன்னிட்டு தர்மபுரி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி வெள்ளியை முன்னிட்டு தர்மபுரி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

தர்மபுரி: ஆடி மாத இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையான நேற்று, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபி?ஷகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. நெசவாளர் காலனி சக்திமாரியம்மன் கோவிலில் உள்ள துர்கை அம்மனுக்கு, காலை, 11:00 மணிக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், தேன் உள்பட பல்வேறு திரவியங்களால் அபி?ஷம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், செந்தில்நகர் மாரியம்மன் புற்று கோவிலில், பெண்கள் பங்கேற்று, புற்றில் பால் மற்றும் முட்டைகளை ஊற்றி, அம்மனை வழிபட்டனர். மேலும், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், வெளிபேட்டைதெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி.,ரோடு, அங்காளம்மன் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அப்பாவுநகர் ஓம்சக்தி அம்மன் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !