உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி மகம்: திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி

மாசி மகம்: திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை: கவுதம் நதிக்கரையில் பலத்த பாதுகாப்புடன் திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு “சூலம் ரூபத்தில்” தீர்த்தவாரி நடந்தது.

மாசி மகத்தையொட்டி திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம் நதிக்கரையில் பலத்த பாதுகாப்புடன்  அண்ணாமலையாருக்கு “சூலம் ரூபத்தில்” தீர்த்தவாரி நடந்தது. உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார்  தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது,  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் புனிதநீராடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !