உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பழநி: பழநி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு, அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பழநி பெரியாவுடையார் கோயிலில் மாலை 4:30 மணிக்குமேல் பிரதோஷவேளையில் நந்திபகவான், மூலவருக்கும் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன் பார்வதி ரிஷபவாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். இடும்பன்கோயிலில் சிவகிரிநாதர், உமாமகேஸ்வரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்தில், ரிஷபவாகனத்தில் திருவுலா நடந்தது. மலைக்கோயில், பெரியநாயகியம்மன்கோயில், கைலாசநாதர், சன்னதிவீதி வேளீஸ்வரர்கோயில், நேதாஜிநகர் காமாட்சியம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோயில், புதுநகர் சிவன் ஆகிய கோயில்களில் அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பால், பழங்கள், பொங்கல், சர்க்கரை பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !