உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படைவீடு ரேணுகாம்பாள் கோவில் நடை அடைப்பு

படைவீடு ரேணுகாம்பாள் கோவில் நடை அடைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த, படைவீடு ரேணுகாம்பாள் கோவிலில், ஆடி மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் விழா சிறப்பாக நடந்து வருகிறது. இன்று, இரண்டாம் ஆடி வெள்ளி விழா நடக்க உள்ளது. இன்று, சந்திரகிரகணம் என்பதால், வழக்கத்துக்கு மாறாக, மாலை, 4:30 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும். இரவு, 8:30 மணிக்கு விழா முடிக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும். நாளை, சந்திரகிரகண சாந்தி பூஜை செய்யப்பட்டு, காலை, 8:30 மணிக்கு பின், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர், என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !