காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை
ADDED :2479 days ago
காஞ்சிபுரம்: பருவ மழை பொய்த்துவிட்டதால், காஞ்சிபுரம் மாவட்ட நீர்நிலைகள், வறண்டு காணப்படுகின்றன.
இந்நிலையில், வரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று, (மே., 5ல்)சக்கரத்தாழ்வார் சன்னிதியில், மழை பொழிய வேண்டி, ஆச்சாரியார்கள், ஸ்லோகம் சொல்லி வழிபாடு நடத்தினர்.வரும், 9ல், ஏகாம்பரநாதர் கோவிலில், மழைக்காக ஹோமம் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.