உண்மையே கடவுளின் கண்ணாடி
* எதிலும் உண்மையாக இருங்கள். ஏனெனில் உண்மையே கடவுளின் கண்ணாடி.
* கவலை, பயத்திற்கு இரையாகாதீர். கடவுளை நம்பி உழைப்பில் ஈடுபடுங்கள்.
* அதிசயத்தை நிகழ்த்தும் சக்தி, பக்திக்கு மட்டுமே உண்டு.
தெய்வத்தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியில், மனிதன் ஈடுபட வேண்டும்.
* ஒரே உண்மையைத் தான் எல்லா அறிவு நூல்களும், பல பெயர்களில் சொல்கின்றன.
* அன்பை விடச் சிறந்தது வேறில்லை. அன்புள்ளம் அனைவரையும் அரவணைக்கும்.
* உள்ளத்தில் அன்பு இல்லாமல் இன்பம் உண்டாகாது. அன்பே வாழ்வின் ஆதாரசக்தி.
* நற்பண்புகளை அறிந்த பிறகும் கூட, மனிதனுக்கு தீய பண்புகளை விட மனமில்லை.
* உங்களை நீங்களே திருத்திக் கொள்வதில், தயக்கம் கொள்ளக் கூடாது.
* வெற்றியிலும், தோல்வியிலும் சமநிலை இழக்காமல் உறுதியுடன் வாழுங்கள்.
* நேர்மை, துணிச்சல் இருந்தால் செல்லும் பாதை நேரானதாகவே இருக்கும்.
* தனக்கும், பிறருக்கும் துன்பம் தருவது பாவம், இன்பம் தருவது புண்ணியம்.
* மனதால் பிறருக்கு தீங்கு நினைக்காதீர். அதற்குரிய தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
* உழைக்கும் இடத்தில் வறுமைக்கு இடமிருக்காது. - பளிச்சென சொல்கிறார் பாரதியார்