உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.கே.பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

ஆர்.கே.பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, விளக்கணாம்பூடி கிராமத்தில் உள்ளது திரவுபதியம்மன் கோவில். மூன்று வாரங்களாக, கோவிலில் அக்னி உற்சவ திருவிழா நடந்து வருகிறது.

இறுதிகட்டமாக, நேற்று (மே., 19ல்) காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, மாலை, 6:00 மணியளவில், அக்னி பிரவேசம் நடந்தது. இதில், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள், திரவுபதியம்மனுடன், அக்னி குண்டத்தில் இறங்கி,
தங்களின் விரதத்தை நிறைவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !