மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :2332 days ago
காரியாபட்டி: காரியாபட்டி முக்குரோடு மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா 10 நாட்கள் நடந்தது. கொடி ஏற்றத்துடன் துவங்கிய விழாவில் அம்மனுக்கு காப்பு கட்டுதல், சக்தி கரகம் எடுத்தல், குத்துவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல், அக்னி சட்டி என நேர்த்தி கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.