கொம்பாடிப்பட்டி பெருமாள் கோவிலில் குறி எடுத்து பூஜை
ADDED :2186 days ago
கிருஷ்ணராயபுரம்: கொம்பாடிப்பட்டி பெருமாள் கோவிலில், குறி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த கொம்பாடிப்பட்டியில், நாகம்மாள், வாவேட்டியம்மன் சன்னதியுடன் பெருமாள் கோவில் உள்ளது. இந்த சுவாமிகளுக்கு முறைப்படி பூஜை செய்வதற்காக குறி எடுக்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், பக்தர்கள் நின்று குறி எடுத்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.