உள்ளூர் செய்திகள்

நமக்கு அலங்காரம் கடவுளுக்கு அருவருப்பு

பைபிள் பொன்மொழிகள் சிலவற்றைக் கேட்போமா!* நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள். தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார். மனுஷர்களுக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.* வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள். அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும். உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும், சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.* ஒருவருக்கொருவர் தயவாயும் மன உ<ருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.* மனிதன் முகத்தை பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறார்.