உள்ளூர் செய்திகள்

உண்மையாக இரு

* உனக்கு நீ உண்மையாக இரு. உன்னை சுற்றி இருக்கும் பொய் தானாக வெளி வரும். * அழிவுக்கு ஆயிரம் வழிகள் உண்டு. உயர்வதற்கு ஒரே வழி தான். * நம்பிக்கையான செயல்களே சந்தோஷத்தின் ஆரம்பம். * துயரங்களில் இருந்து மீளவேண்டுமா... பிறரை மனம் நோகச் செய்யாதீர். * மதியாதார் இடத்தில் மறந்தும் தண்ணீர் குடிக்காதீர்.* அரை நிமிட நேரமாவது அடுத்தவர் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.* பணிந்து வாழ்ந்து பார். பரலோகம் உன்னை வணங்கி வரவேற்கும்.* மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமையோடு உதவுங்கள். * ஆண்டிற்கு ஒரு மரம் நடுங்கள். * பெருமைக்காக சமூக சேவையில் ஈடுபடாதீர்.* உண்மையை பேசு, நல்லதே நடக்கும். * பதறும் காரியங்களால் எந்த ஒரு செயலும் உறுதியாக நடக்காது.