பைபிள் பொன்மொழிகள்
* நல்ல மனுஷன் நல்லவைகளை இருதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான். தீயவன் தீய பொக்கிஷத்திலிருந்து தீயதைக் கொண்டு வருகிறான்.* கடவுளின் ஊழியன் வழக்காடும் தன்மையுள்ளவனாய் இருக்கக்கூடாது. எல்லா மனிதர்களிடமும் கண்ணியமாகவும், போதிக்கும் திறமையுள்ளவனாகவும் பொறுமைசாலியாகவும் இருக்கவேண்டும்.* நண்பன் புண்படுத்தும் காயங்கள் உள்ளூரப் பற்றுதல் உள்ளவை. ஆனால், பகையாளி ஒருவன் வாரி வழங்கும் முத்தங்களோ உள்ளூரப் பித்தலாட்டமானவை.* நாளைய தினத்தைப் பற்றி பெருமைப்படாதே. நாளை கொண்டு வருவது இன்னதென நீ அறியமாட்டாய். நாளைய கவலையைப் பற்றி சிந்திக்காதீர்கள். அன்றாடக் கவலையே அன்றைக்குப் போதும்.* பரமண்டலத்தில் இருக்கும் உங்கள் பிதா உத்தமராயிருப்பது போல நீங்களும் உத்தமராயிருங்கள். உத்தமனாக இருக்க விரும்பினால் உனக்குள்ளவைகளை விற்று தரித்திரர்களுக்கு கொடு. ஈகை உள்ளவனுக்கு எவனும் சினேகிதன்.