உள்ளூர் செய்திகள்

நமக்காக ஏசு சொன்னவை

* ஒருவன் தேவ பக்தியுள்ளவனாய் இருந்து, அவருக்கு சித்தமானதைச் செய்தால் தேவன் அவனுக்கு செவி கொடுப்பார். * நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்.* உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு. பின்பு, உன் சகோதரன் கண்ணில்இருக்கிற துரும்பை எடுத்துப் போட வகை பார்ப்பாய்.* நீங்கள் ஜெபம் பண்ணும்போது, எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும். * ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும், அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை. * ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம்.