உள்ளூர் செய்திகள்

அமைதி பெருகட்டும்

* சாந்த குணத்துடன் செயல்படுபவனே அறிவாளி.* விரைவில் செல்வந்தனாக முயல்வது நல்லதல்ல.* உழைப்பின்றி சுலபமாய் சேர்த்த செல்வம் குறைந்து போகும்.* ரத்த வெறி, வஞ்சனை, சூழ்ச்சியுள்ள மனிதர்களை ஆண்டவர் வெறுக்கிறார்.* நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.* ஒவ்வொருவனும் தன் பாரத்தை தானே சுமப்பான்.* இரு தரப்பு நியாயத்தையும் கேட்டு நேர்மையுடன் தீர்ப்பு சொல்.* தோற்றம் கண்டு மயங்காதே. அவசரப்பட்டு முடிவு செய்யாதே.* தீமையாய்த் தோன்றுகிற அனைத்திலிருந்தும் விலகுங்கள்.* நல்லதை தீயதென்று சொல்லுபவருக்கு துயரம் தான் மிஞ்சும்.- பொன்மொழிகள்