திரும்பத் திரும்பச் சொல்லுங்க இந்த "5 வார்த்தைகளை!
இயேசு தன் சீடர்களுக்கு அறிவித்த போதனைகள் அனைத்தும், அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. * எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்யம் (சொர்க்கம்) அவர்களுடையது.* துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதல்அடைவார்கள்.* சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.* நீதியின் மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்.* இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.* இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.* சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்.* நீதியின் நிமித்தம் துன்பப் படுகிறவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்யம் அவர்களுடையது.இயேசு நமக்கு போதித்த இரக்கம், நீதி. சமாதானம், எளிமை, சாந்தம் ஆகிய ஐந்து வார்த்தைகளை திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாலே, இவ்வுலகில் சண்டையோ போட்டியோ இருக்காது. இந்த நற்குணங்களை வளர்க்க நாமும் உறுதியெடுப்போம்.