பெற்றோரே... உஷார்
UPDATED : ஜூன் 12, 2025 | ADDED : ஜூன் 12, 2025
பெற்றோரின் அக்கறையின்மையால் குழந்தைகள் கட்டுப்பாடு, ஒழுக்கம் இல்லாமல் வளர்கிறார்கள். இப்போது வளரும் குழந்தைகள்... * துாங்கிய படுக்கையைத் தானே எடுப்பதில்லை. * பெற்றோர், பெரியவர்களை மதிப்பதில்லை * உறவினர்களை யார் என்றே தெரியவில்லை. * வெளி நபர், இடங்களில் பழகத் தெரியவில்லை. * எப்படி உடுத்துவது என்ற தெளிவு இல்லை.* நல்லது, கெட்டதை பகுத்தறிய முடியவில்லை. * தொலைநோக்கு பார்வை, சிந்தனை இல்லை. இவை எல்லாம் ஆபத்தை விளைவிக்கும். எனவே உஷாராக இருங்கள். சிறுவயது முதல் நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுங்கள். குழந்தைப்பருவமே எதிர்காலத்தின் அஸ்திவாரம்.