பதில் சொல்ல காத்திருங்கள்!
பள்ளியில் ஆசிரியர் கேள்வி கேட்கிறார். புத்திசாலி மாணவர்கள் பதில் சொல்கின்றனர். சிலர் விழிக்கின்றனர். இதற்கு காரணம் தன்னம்பிக்கை குறைவும், பயமும் தான்!இந்த பூமியில் வாழும்போது வேண்டுமானால் நாம் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்பிவிடலாம். ஆனால், என்றாவது ஒருநாள் நாம் தேவனின் முன்னால் செல்வோம். அவர் நம்மிடம் பல கேள்விகளைக் கேட்பார்.''நீ படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவில்லை. கடமையைச் செய்யவில்லை. மனதில் திட சிந்தனையை வளர்த்துக்கொள்ளவில்லை. 'பயப்படாதே... நான் உன் அருகில் இருக்கிறேன்' என்று நான் சொல்லியதை நீ செவிமடுக்கவில்லை. பைபிளை புரட்டியதே இல்லை. ஏன் இப்படி நடந்து கொண்டாய்?'' என கேட்கும் போது, நாம் வாய்மூடி மவுனியாக இருக்க முடியாது.இந்த கேள்விகளுக்கு, பதிலளிக்க நம்மை இப்போதே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியானால் தான், தேவனின் ஆசிர்வாதம் கிடைக்கும்.