கேளுங்க சொல்கிறோம்
எம்.சங்கரி, மயூர்விஹார், டில்லி.*விநாயகரை எந்த நாளில் வழிபடலாம்?சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபட சங்கடம் தீரும். மேலும் செவ்வாய், வெள்ளி ஏற்றவை. வி.தருண், திருத்தணி, திருவள்ளூர்.*சித்தி, புத்தி என்பவர் யார்?வெற்றி, புத்தியை தருபவர் விநாயகர். இதை உணர்த்தும் விதத்தில் சித்தி, புத்தியுடன்(மனைவிகள்) இருக்கிறார். எஸ்.வினோதா, ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி.*விநாயகரின் நட்சத்திரம், ராசி எது?அஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி கே.சிந்துஜா, கனகபுரா, பெங்களூரு.*எலியின் மீது விநாயகர் இருப்பது ஏன்?கஜமுக அசுரனை தந்தத்தால் குத்த எலி வடிவில் சரணடைந்தான். அவனை வாகனமாக ஏற்றார் விநாயகர். ஆர்.வைதேகி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி.*அர்ச்சனை செய்ய அருகம்புல்லிற்கு இணையான பூக்கள் எவை?வெள்ளெருக்கு, தும்பை, வில்வம் பி.ஹேமந்த், சிவகாசி, விருதுநகர்.*கனவில் வீட்டுக்கு யானை வந்தால்... உங்கள் வழிபாட்டை விநாயகர் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். ஆர்.கணபதி, பல்லடம், திருப்பூர்.*விநாயகர் சதுர்த்தியை தேசிய அளவில் கொண்டாடியவர் யார்?தேச ஒற்றுமைக்காக விடுதலை போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் கொண்டாடினார். எம்.அர்ச்சனா, நிலக்கோட்டை, திண்டுக்கல்.*யானைச் சாணம் திருஷ்டியை போக்குமா…யானையின் சாணம் செய்வினை கோளாறையும், அதன் காலடி பட்ட மண் திருஷ்டியையும் போக்கும். எல்.கணேஷ், கருவடிபாளையம், புதுச்சேரி.*பிள்ளையார்சுழி இடுவது ஏன்?ஓம் என்னும் மந்திரமே விநாயகர். அதனால் பிள்ளையார்சுழி இடுகிறோம். ஜி.மயூரா, சிங்காநல்லுார், கோயம்புத்துார். *விநாயகருக்குப் பிடித்த ராகம், தாளம் எது?ராகம் - ஹம்ஸத்வனி, கம்பீரநாட்டைதாளம் - ஆதி, சச்சபுடம்