உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

ம.அம்பிகா, நாகர்கோவில், கன்னியாகுமரி. *முருகனுக்கு பாலாபிஷேகம் தினமும் செய்யலாமா?முருகனுக்கு விருப்பமான இதை தினமும் செய்யலாம். எம்.வேல்முருகன், முக்கூடல், திருநெல்வேலி. *சஷ்டி விரதத்தை ஆண்டு முழுவதும் பின்பற்றலாமா?கந்தசஷ்டி விரதம் இருப்பதோடு மாதந்தோறும் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருங்கள். பி.ரமணி, பூம்பாறை, திண்டுக்கல்.*பன்னீர் இலை விபூதி பூசினால்...திருச்செந்துார் முருகனின் பிரசாதம் பன்னீர் இலை விபூதி. அதை பூசினால் நோய் தீரும். ரா.சுந்தர், அலங்காநல்லுார், மதுரை. *ஓம் என்னும் மந்திரத்தை மட்டும் சொல்லலாமா?சொல்லலாம். அதிகாலையில் சொன்னால் முருகன் அருள் கிடைக்கும். கே.ராகவி, ராமமூர்த்தி நகர், பெங்களூரு.*வேலும் மயிலும் துணை என சொல்வது ஏன்?மயில் சரணாகதியையும், வேல் வெற்றியையும் குறிக்கும். நாமும் முருகனை சரணடைந்தால் நலமுடன் வாழலாம். எம்.சந்தோஷ், திருவான்மியூர், சென்னை.*லட்சுமி கடாட்சம் தரும் திருப்புகழ் எது?சரண கமலாலயத்தை எனத் தொடங்கும் திருப்புகழை பாடுங்கள். ஏ.நாகராஜன், சமத்துார், பொள்ளாச்சி.*முருகப்பெருமான் சிவபூஜை செய்கிறாரே...ஏன்?சூரபத்மனை கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்கிறார். கே. வைஷ்ணவி, ஸ்ரீமுஷ்ணம், கடலுார். *சில கோயில்களில் வேலிற்கு மட்டும் பூஜை நடக்கிறதே...முருகனும் வேலும் வேறு வேறு அல்ல. அதனால் வேலுக்கும் பூஜை நடக்கிறது.ஆ. பரிமளா, வசந்த்விகார், டில்லி.*செவ்வாய் தோஷம் தீர... செவ்வாய்தோறும் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம் பாடுங்கள்.