கேளுங்க சொல்கிறோம்
எம்.கமலேஷ், தோரணஹள்ளி, மைசூரு: கந்தசஷ்டி கவசம் கேட்டால்...கவசம் என்றால் காப்பாற்றுவது. தினமும் இதைக் கேட்டால் முன்வினை தீரும். துன்பம் போகும்.ம.மதன், கீழப்பாவூர், தென்காசி: உபதேசிக்கும் கிருஷ்ணரை வழிபட்டால்...மிக நல்லது. அவரை பார்க்க பார்க்க மகிழ்ச்சி கிடைக்கும்.பெ.ஜெயந்தி, தாமல், காஞ்சிபுரம்: ஆட்டுக்கிடா வாகனத்தை கோயிலுக்கு கொடுக்கலாமா?கொடுக்கலாம். இதனால் உடல்நலம், ஆயுள் பெருகும்.ஆர்.பரிமளா, வசந்த்குஞ்ச்,டில்லி: உம்மாச்சி என்றால் யார்?சிவபெருமான். இவரது மற்றொரு பெயரான உமாமகேஸ்வரர் என்பதன் சுருக்கம் இது என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். எம்.அனிதா, கீழ்குந்தா, நீலகிரி: நமசிவாய, சிவாயநம - யார் ஜபிக்கலாம்?நமசிவாய - எல்லோரும்;சிவாயநம - தீட்சை பெற்றவர் ஜபிக்க வேண்டும். ரா.ராஜா, சிறுமலை, திண்டுக்கல்: மகிழ்ச்சியாக வாழ... திருவாதிரையன்று விரதமிருந்து நடராஜரை வழிபட மகிழ்ச்சியாக வாழலாம். பா.மலர்விழி, திருவெண்ணெய்நல்லுார், விழுப்புரம்: துரோகத்தை...மன்னியுங்கள், மறந்து விடுங்கள். கு.ராம்ஜி, ராமேஸ்வரம், ராமநாதபுரம்: பாவச் செயல்கள் எவை?கொலை, கொள்ளை, மது அருந்துதல், சூதாட்டம், பெண்களிடம் முறை தவறி நடத்தல்.வே.பரிமளம், மார்த்தாண்டம், கன்னியாகுமரி: எதிரி, துரோகியின் கொட்டம் அடங்க...ஓம் அஷ்ட ஹஸ்தாய வித்மஹே; அனுக்ரஹ ரூபாய தீமஹி; தந்நோ பத்ரகாளி ப்ரசோதயாதே'.என்னும் காளி காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்.