உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

 கு.துவாரகேஷ், அவிநாசி, கோயம்புத்துார்: பயம் தீர...சர்வ ஸ்வரூபே சர்வேசி சர்வ சக்தி சமன்விதே!பயேப்ய ஸ்த்ராஹினோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே!!இதை தினமும் சொல்லி துர்கையை வழிபடுங்கள். ஆர்.ஆனந்த், எட்டையபுரம், துாத்துக்குடி: இதயக்கோயில் எங்குள்ளது?சிவபக்தரான பூசலார் இக்கோயிலை திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் கட்டினார். சுவாமியின் பெயர் இருதயாலீஸ்வரர். வி.மாரி, நத்தம், திண்டுக்கல்: சித்தர்கள் கோயில்களை தரிசித்தால்...அறியாமை அகலும்; மனஅமைதி கிடைக்கும். டி.காவ்யா, இருக்கன்குடி, விருதுநகர்: முன்னோர் கட்டிய கோயிலை பராமரிக்காவிட்டால்... பாவம் சேரும். முன்னோர் கொடுத்ததே இந்த வாழ்க்கை. அவர்கள் கட்டிய கோயிலை பராமரிப்பது உங்களின் கடமை. மு.அமராவதி, வடிவீஸ்வரம், கன்னியாகுமரி: உக்கிர தெய்வத்தை வழிபடலாமா...கோயிலில் வழிபடலாம். வீட்டில் வேண்டாம். பே.புஷ்பராணி, ஸ்ரீமுஷ்ணம், கடலுார்: கிராம தெய்வத்திற்கு எத்தனை நாள் திருவிழா நடத்தலாம்?ஒற்றைப்படை எண்ணில் (1, 3, 5, 7...) இருப்பது அவசியம். ரா.பூரணி, ஆவடி, திருவள்ளுர்: தாயார் செய்ய வேண்டிய நேர்ச்சையை மகன் நிறைவேற்றலாமா?நிறைவேற்றலாம். தாயின் ஆசியும், கடவுளின் அருளும் கிடைக்கும். கா.ராஜேஸ்வரி, பசவன்குடி, பெங்களூரு: எருக்கம்பூவை சிவனுக்கு சாத்தலாமா...சாத்துவது விசேஷம். சிவனுக்குரிய பூக்களில் இதுவும் ஒன்று. யு.ஆர்த்தி, ஏரோசிட்டி, டில்லி: காணிக்கையை மற்றவர் மூலம் கோயிலுக்கு கொடுத்து அனுப்பலாமா?தவிர்க்க முடியாத சூழலில் மற்றவர் மூலம் கொடுத்தனுப்பலாம்.