கேளுங்க சொல்கிறோம்
கே.தர்ஷினி, சிவகங்கை: *வெற்றியாளராக திகழ... ஜயத்வம் தேவி சாமுண்டே ஜயபூதாபஹாரிணி|ஜயஸ்ஸர்வகதே தேவி ஜயதுர்கே நமோஸ்துதே||ஜெயதுர்கை தாயே! வெற்றியை எனக்கு கொடு என இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். வி.பிரகாஷினி, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி: *குபேரன் அருளைப் பெற...பக்தி, உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் குபேரன் அருள் கிடைக்கும்.ஆர்.யாமினி, அன்னுார், கோயம்புத்துார்: *வீட்டில் விளக்கு ஏற்றுவது அவசியமா...மகாலட்சுமி வீட்டில் குடியிருக்க விளக்கேற்றுங்கள். நேரம்: காலை 6:00 - 8:00 மணி, மாலை 5:30 - 7:30 மணிஎம்.கமலினி, வில்லிவாக்கம், சென்னை: *கோயில் திருப்பணியில் பங்கேற்றால்....முன்னோர் விட்டுச் சென்ற சொத்து கோயில்கள். திருப்பணியில் பங்கேற்றால் குடும்பம் தழைக்கும். எம்.ஹர்ஷினி, தச்சநல்லுார், திருநெல்வேலி: *பிறந்த நேரம், நடப்பு திசை - ஜாதக பலனுக்கு எது அவசியம்?பிறந்த நேரம் என்பது பொதுவானது. நடப்பு திசையே நிகழ்கால பலனுக்கு அவசியம்.எல்.வினோதினி, திருநயினார்குறிச்சி, கன்னியாகுமரி: *வெளியூர் செல்லும் முன் யாரை வழிபடலாம்?விநாயகரை வழிபட்டு சிதறு தேங்காய் உடைத்தால் பயணம் இனிதாகும்.