உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

 எம்.யாமினி, பிராட்வே, சென்னை: தொழிலில் முன்னேற... புன்சிரிப்புடன் வாடிக்கையாளரிடம் பேசுங்கள். உண்மை, உழைப்பு அவசியம். தினமும் கடவுளை வணங்குங்கள்.ஆ.யாழினி. வில்லியனுார், புதுச்சேரி: நிலப்பிரச்னை தீர...முருகனுக்கு தொடர்ந்து 21 செவ்வாய் அன்று பால் அபிேஷகம் செய்யுங்கள். வி.ராகினி, குன்றக்குடி, சிவகங்கை: அழைப்பிதழில் மஞ்சள் தடவுவது ஏன்?மங்களகரமான செயல்கள் நிலைக்க வேண்டும் என்பதால். ஆர்.நந்தினி, கருமத்தம்பட்டி, கோயம்புத்துார்: அம்மனுக்கு வெள்ளைப்புடவை சாத்துகிறார்களே...எல்லாக் கோயிலிலும் சாத்துவது இல்லை. வழக்கத்தில் இருந்தால் பின்பற்றலாம்.கே.மோகினி, ஆழ்வார்திருநகரி, துாத்துக்குடி: பெண் பார்க்க ஏற்ற நாள் எது?முகூர்த்த நாளில் பார்ப்பது நல்லது. டி.கமலினி, பெரியகுளம், தேனி: அமாவாசை, ஏகாதசி, சிவராத்திரி அன்று திருமணம் கூடாதா...சில குறிப்பிட்ட திதி திருமணத்திற்கு ஏற்றது. அதில் இவை இல்லை. விரத நாளில் திருமணம் நடந்தால் விருந்துண்ண முடியாதே. தா.மாலினி, திக்குறிச்சி, கன்னியாகுமரி: வீட்டில் சுவாமி சிலைக்கு தினமும் அபிஷேகம் செய்யணுமா.... விசேஷ நாளில் போதும். நாள், திதி, நட்சத்திரத்தில் செய்யலாம். உ.ம். முருகன்: செவ்வாய், வெள்ளி, சஷ்டி, கார்த்திகை.மு.காமினி, ஜோர்பாக், டில்லி: சன்னதிக்கு நேராக நின்று வழிபடலாமா... இடது, வலது புறத்தில் நின்றால், சுவாமியின் கடைக்கண் பார்வை நம் மீது விழும். கு.பத்மினி, வாலாஜாபாத், காஞ்சிபுரம்: ஸ்லோகத்தை பொருள் தெரியாமல் படிக்கலாமா... படிக்கலாம். தவறாக உச்சரிக்க கூடாது.